புத்துயிர் பெறும் துறைமுகம்- மதுரவாயல் சாலை!

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கட்டப்படும் விரைவுப்பாதைக்கு ரூபாய் 5,855 கோடி நிதி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கட்டப்படும் விரைவுப்பாதைக்கு ரூபாய் 5,855 கோடி நிதி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

author-image
Janani Nagarajan
New Update
புத்துயிர் பெறும் துறைமுகம்- மதுரவாயல் சாலை!

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கட்டப்படும் விரைவுப்பாதை

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கட்டப்படும் விரைவுப்பாதைக்கு ரூபாய் 5,855 கோடி நிதி வழங்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisment

5,855 கோடி மதிப்பிலான துறைமுகம்- மதுரவாயலுக்கு இடையே கட்டப்படும் உயர்மட்ட விரைவுப் பாதையை மக்களுக்காக செயல்படுத்துவதற்கு வைத்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் இந்திய கடற்படை ஆகியவர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரின் முன்னிலையில் நடந்தது.

20.6 கிலோமீட்டருக்கு கட்டப்படும் பாதையானது கோயம்பேடு மற்றும் நேப்பியர் பாலம் இடையே இரண்டு அடுக்குகளாக பிரியும். மேலும் முதல் அடுக்கில் வரும் 13 வளைவுகள் உள்ளூர் போக்குவரத்திற்காக மட்டுமே இயங்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவைத்து பத்தாண்டுகள் ஆனப்பிறகு தற்போது தொடரவுள்ளனர்.

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உயர்மட்ட விரைவுச்சாலை உள்ளிட்ட நான்கு அமைச்சகங்களின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த சீரமைப்பு வெள்ளம் வெளியேற்றத்தை சீர்குலைப்பதாகக் கூறி மாநில பொதுப்பணித்துறை NHAIக்கு வேலையை நிறுத்திவைக்கக்கூறி 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு ஆதரவளித்தது.

"இப்போது மாநிலமும் மையமும் முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்குள் பணிகள் வழங்கப்பட்டு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சென்னை துறைமுகத்திற்கு உயிர்நாடியாக அமையும், மற்றும் எங்கள் சரக்கு போக்குவரத்துத்திறனை உணர உதவும். மேலும் நகர போக்குவரத்துக்கு பெரிய அளவில் உதவுங்கள்" என்று சென்னை போர்ட் டிரஸ்ட் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: