சென்னை சூளைமேட்டில் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த வக்கீல் சிக்கினார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வக்கீல் சாலை சிவகுமரன். சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர காரில்பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை எண்ணிய அதிகாரிகள், அதில் ரூ. 2 கோடி இருப்பதாக தெவித்தனர். இந்த பணம் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
அவர் வீட்டில் இருந்த கார், மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.