/indian-express-tamil/media/media_files/dm9Hp7is1cj03CTuyliG.jpg)
சவுக்கு சங்கர் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Savukku Shankar | சேலம் சைபர் கிரைம் போலீஸார் திங்கள்கிழமை (மே 6, 2024) இரவு, தமிழகத்தில் பெண் காவலர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதாக யூடியூபர் ஏ.சங்கர் என்கிற ‘சவுக்கு’ சங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது, இதே குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே 4ஆம் தேதி கோவையில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட திரு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான வழக்கு தொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு வருகிற 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பிணை மனுவை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.