Advertisment

சீமானுக்கு 2-வது முறை சம்மன் வழங்கிய காவல்துறை

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முறையாக போலீஸ்  சம்மன் வழங்கி உள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
சீமானுக்கு முறையாக போலீஸ்  சம்மன் வழங்கி உள்ளது.

சீமானுக்கு முறையாக போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முறையாக போலீஸ்  சம்மன் வழங்கி உள்ளது.

Advertisment

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்யும் வரை போராட்டம்  தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு  தொடர்பாக விசாரணைக்கு செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலிசார் சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், வெளியூர் செல்வதால் செவ்வாய்க்கிழமை ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விசாரணைக்கு சீமான் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமானின் 2 கடிதத்தை கொடுத்து விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், சென்னை  பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார், சீமானை சந்தித்து காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வருகின்ற 18ம் தேதி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராவார் என்று தகவல்  வெளியாகி உள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment