செந்தில் பாலாஜி வழக்கில், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும், செந்தில் பாலாஜி தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹக்திக்கு கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
அமலாகத்து துறையால் கைது செய்யப்படுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொண்ர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
துஷார் மேத்தா முன்வைத்த வாதத்தில் ” கைது செய்வது தொடர்பாக முன்கூட்டியே அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற தேவை இல்லை” என்று கூறினார். இதற்கு முகுல் ரோஹக்தி ‘ அமலாக்கத்துறை என்பது காவல்துறை இல்லை. அதனால் ஒருவரை காவலில் எடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
மேத்தா முன்வைத்த வாதத்தில் “ சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் ஆதாரம் இருந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சி.ஆர்.பி.சி சட்டப்பிரிவு 41-ன் படி கைது தொடர்பாக முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டியதில்லை. அமலாக்கத்துறை சமந்தபட்ட நபரை கைது செய்யவில்லை என்றால் சட்டபிரிவு 41 கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும் “ என்று அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், குற்றம் செய்த நபர் சாட்சியம் அல்லது ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்க கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேத்தா வாதத்தை முன்வைத்தார்.
ஒரு தரப்பின் 16 மணி நேர வாதங்களை கேட்ட நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வு, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதத்தை ஜூன் 28-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“