/indian-express-tamil/media/media_files/2025/10/13/sivagangai-2025-10-13-12-54-13.jpg)
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்கள் மேல் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சிவகங்கை நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் விபத்து காரணமாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு பயிற்சி மருத்துவ மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவியும் வெளியானது
இதையடுத்து, அந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்களாக நடைபெற்ற அந்தப் போராட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “எங்கள் குடும்பத்தையே சீரழித்து விட்டீர்கள்; எங்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை. காவல்துறை இரவு பகலாக எங்களை சித்திரவதை செய்கிறது. சிசிடிவி வீடியோ முழுமையாக வெளியாகவில்லை; எங்களை சாக விடுங்கள்!” என்று குடும்பத்தினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை, அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து தங்கள்மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் விரைவாக தலையிட்டு தீவைப்பதைத் தடுத்தனர். இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.