ஸ்மார்ட்போன்களை போல தற்போது ஸ்மார்ட் வாட்ச்களும் டிரெண்ட் தான். இந்த நிலையில், குழந்தைகள் அணிந்திருக்கும் சில ஸ்மார்ட்வாட்ச்கள், அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என ஐரோப்பிய வாடிக்கையாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜி.பி.எஸ் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளுதல் மற்றும் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசும் நிலையில், அவற்றை ஹேக்கர்களில் ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஐரோப்பிய வாடிக்கையாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் சில நிறுவனங்கள், ஐரோப்பிய டேட்டா பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்யிய வாடிக்கையாளர் கவுன்சில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும் என ஸ்மார்ட் வாட்ச்களை தங்களது குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர். ஆனால், அதில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைத்து அறியாமையில், பாதுகாப்பற்ற நிலைக்கு தங்களது குழந்தையை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
Gator 2, Tinitell, Viksfjord and Xplora போன்ற நிறுவனங்களில் ஸ்மார்ட்வாட்ச்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிய நார்வேஜியன் கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. Tinitell நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களில் பாதுகாப்பு சிறப்பம்சங்கள் குறைபாடு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நார்வேஜியன் கவுன்சிலானது, சிறந்த பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Viksfjord நிறுவனமானது, இது ஒரு பிரச்சனை இல்லை என்றும், முன்னதாகவே கிடைத்த செய்திதான் என்றும் தெரிவித்துள்ளது. Tinitell நிறுவனமும், தங்களது ஸ்மார்ட்வாட்ச்களில் எந்தவித பிரச்சனைகளும் இருப்பதாக கருதவில்லை என்று தெரிவித்துள்ளது.