Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/monsoon5-1.jpg)
Southwest Monsoon
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 தினங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அடுத்த 24மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.