தமிழகத்தில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 தினங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அடுத்த 24மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.