/tamil-ie/media/media_files/uploads/2017/07/a726.jpg)
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் குறைவு, காய்ச்சல், மயக்கம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தனபாலை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
தனபால் அவைக்கு வராத்தால், நேற்றும் இன்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவைக் கூடியது. இந்நிலையில், சபாநாயகர் தனபாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது. தற்போது உடல்நிலை சீரானதால் தனபால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நாளை சார்ஜ் ஏற்றிக் கொண்டு சட்டசபை நிகழ்வில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.