தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டார்.
இந்தநிலையில் இந்த வீடியோவை வைத்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த கௌதம் என்பவர் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் மொடக் குறிச்சியை சேர்ந்த கௌதமை ஈரோடு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல்துறையை கண்டித்து அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பபட்து.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“