மார்ச் மாதம் வரும் சனிக்கிழமைகளில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகம்... பதிவு செய்வதற்கான கட்டணம் வசூல்

அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் அலுவலகங்கள் செயல்படும், விடுமுறை நாட்களில் பதிவு செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Aadi Peruku festival, additional tokens distributes in Sub Registration office, ஆடிப்பெருக்கு முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை, Aadi Peruku festival additional tokens, Sub Registration office distributes Aadi Peruku festival

சனிக்கிழமைகளில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகம்

பொதுமக்களின் கோரிக்கை காரணமாக மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் எப்போதும் போல அலுவலகங்கள் செயல்படும். அதேபோல் விடுமுறை நாட்களில் பதிவு செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து தமிழக பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும்.

 அதன்படி இன்று (மார்ச் 1), 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மார்ச் மாதம் என்பதால் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை நிறைவு செய்ய வசதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மார்ச் மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை ஆவணங்கள் பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட உள்ளது.

Registration

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: