தமிழக மாவட்டங்களை சரியாக அடையாளம் சொன்னால் ரஜினியுடன் இணையத் தயார்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக மாவட்டங்களை சரியாக அடையாளம் சொன்னால் ரஜினியுடன் இணையத் தயார்!

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினிகாந்த் சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவருடன் இணையத் தயார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

Advertisment

* ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?

* நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?

* எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?

Advertisment
Advertisements

* கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

’இந்த நான்கு கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கும்  கட்சியில் இணைவதாக இருக்கிறேன்’ என சுப.உதயகுமாரன் அறிவித்துள்ளார்.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: