பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினிகாந்த் சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவருடன் இணையத் தயார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில்,
* ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?
* நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
* எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
* கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
’இந்த நான்கு கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கும் கட்சியில் இணைவதாக இருக்கிறேன்’ என சுப.உதயகுமாரன் அறிவித்துள்ளார்.