போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூடி மோசடி செய்த செந்தில் பாலஜி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜியின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தர்மராஜ் உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. தர்மராஜ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40 லட்சம் மோசடி செய்ததாக வாதிட்டார். மேலும் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி செந்தில் பாலஜியின் தரப்பு வாதங்களை நிராகரித்தனர். மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். ஏற்கனவே அமலாக்கப்பிரிவினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலஜிக்கு மேலும் சிக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.