எடப்பாடியும், ஓபிஎஸ்.ஸும் தொண்டர்களுக்கு பதில் கூறியே ஆகவேண்டும் : ட்விட்டரில் கொந்தளித்த தினகரன்

ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியது குறித்து ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடியும், ஓபிஎஸ்.ஸும் பதில் கூறியே ஆகவேண்டும் என தினகரன் கூறினார்.

ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியது குறித்து ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடியும், ஓபிஎஸ்.ஸும் பதில் கூறியே ஆகவேண்டும் என தினகரன் கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeyalalitha, aiadmk, poes garden, income tax department, IT raids, tamilnadu government, v.p.kalairajan, ttv dhinakaran

ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியது குறித்து ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடியும், ஓபிஎஸ்.ஸும் பதில் கூறியே ஆகவேண்டும் என தினகரன் கூறினார்.

Advertisment

சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இருக்கிறது. இன்று (17-ம் தேதி) இரவு 9 மணியளவில் இங்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு போலீஸார் துணையுடன் உள்ளே புகுந்தனர்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அவரது உதவியாளர் பூங்குன்றனின் அலுவலகம் இருக்கிறது. அதை குறி வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக இதை குறிப்பிடுகிறார்கள்.

இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்ததும் இரவு 10 மணிக்கு மேல் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். போலீஸார், மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Advertisment
Advertisements

இதற்கிடையே அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ரெய்டு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து கருத்துகளை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாகவது:

முதல் பதிவு : தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..?

2-வது பதிவு : போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.

3-வது பதிவு : அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது?

இவ்வாறு பதிவுகளை வெளியிட்டார்.

 

Poes Garden Ttv Dhinakaran Income Tax Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: