கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்கீழ் 14 உறுப்புக் கல்லூரி கள், 21 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 16-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், இளங்கலை படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. முன்னதாக கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட கலாந்தாய்வு இன்று தொடங்கி வரும் ஜூன் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 13 இளங்கலை படிப்புகளில் உள்ள 3030 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்கியது.