Advertisment

News Today: ராமர் கோயில் பூமி பூஜை - வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தி

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
News Today: ராமர் கோயில் பூமி பூஜை - வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தி

Latest News Updates

Tamil News Today Live : தமிழகத்தில், மும்மொழி கொள்கையை, அரசு எப்போதும் அனுமதிக்காது; இரு மொழி கல்வி கொள்கை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றப்படும்' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பை களைய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை: முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை (ஆகஸ்ட் 5ம் தேதி) நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:32 (IST)04 Aug 2020

    லெபனான் குண்டு வெடிப்பு - வீடியோ

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு சம்பவம் வீடியோ,

    22:29 (IST)04 Aug 2020

    போக்குவரத்து துண்டிப்பு

    மும்பை உள்பட மஹாராஷ்டிராவில் கனமழை கொட்டி வரும் நிலையில் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    22:03 (IST)04 Aug 2020

    பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நீட்டிப்பு

    பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆகஸ்ட் 04 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    21:50 (IST)04 Aug 2020

    லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு

    லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளன மீட்புக் குழுவினர்

    பெய்ரூட் துறைமுகத்தில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பாதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை

    21:13 (IST)04 Aug 2020

    34,713 கன அடி நீர் காவிரியில் திறப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 34,713 கன அடி நீர் காவிரியில் திறப்பு

    கபினி அணையில் இருந்து 30,000 கன அடி நீர், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,713 கன அடி நீர் திறப்பு

    * காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

    21:12 (IST)04 Aug 2020

    இதயத்திற்கு நெருக்கமான கனவு

    எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது

    எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள்

    ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்

    - பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி

    20:47 (IST)04 Aug 2020

    கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம். ஏற்கனவே அரசுக்கு 2 முறை கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேபோல் அரசின் விதிகளை பின்பற்றவும் தயாராக இருக்கிறோம்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மற்றும் பழ மார்க்கெட் மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அரசு அழைத்தாலும் பேச தயாராக இருக்கிதோம். அதேபோல் 2 ம் கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

    20:23 (IST)04 Aug 2020

    பிரான்ஸில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    பிரான்ஸ் நாட்டில் வரும் குளிர்காலம் அல்லது இலையுதிர்காலங்களில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்க அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் ஆபத்தானது, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    19:48 (IST)04 Aug 2020

    தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா

    மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    * தொற்று உறுதியானதை அடுத்து மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

    19:48 (IST)04 Aug 2020

    பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

    அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

    ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டு

    - முதல்வர் பழனிசாமி

    19:22 (IST)04 Aug 2020

    ராகுல் தொடர்பை துண்டிக்க வேண்டும்

    “பாஜகவில் இணையவில்லை; முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும். ராகுல் காந்தியுடனான தொடர்பை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்”

    - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அதிரடி பேட்டி

    19:06 (IST)04 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 2

    தஞ்சை- 93

    திருச்சி- 83

    திருப்பத்தூர்-66

    திண்டுக்கல்-64

    சேலம்- 62

    நாகை- 55

    விழுப்புரம் - 50

    அரியலூர்- 49

    ராமநாதபுரம்- 47

    தென்காசி- 45

    புதுக்கோட்டை- 41

    மதுரை - 40

    நாமக்கல்- 39

    திருவாரூர்- 31

    கரூர்-25

    கிருஷ்ணகிரி- 25

    ஈரோடு - 20

    நீலகிரி - 14

    திருப்பூர்- 8

    பெரம்பலூர் - 4

    தர்மபுரி - 2

    19:06 (IST)04 Aug 2020

    மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு - பகுதி 1

    சென்னை-1023

    விருதுநகர்- 424

    திருவள்ளூர்- 358

    ராணிப்பேட்டை- 79

    தேனி- 292

    செங்கல்பட்டு-245

    கோவை - 228

    காஞ்சிபுரம்-220

    தூத்துக்குடி- 189

    கடலூர்- 264

    வேலூர் - 160

    நெல்லை- 155

    க.குறிச்சி- 149

    சிவகங்கை- 141

    தி.மலை - 132

    குமரி -128

    18:42 (IST)04 Aug 2020

    5,063 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று கொரோனாவால் 108 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்வு.

    சென்னையில் மேலும் 1,023 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு

    சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,040 பேருக்கு கொரோனா

    18:32 (IST)04 Aug 2020

    43 மருத்துவர்கள் இறந்ததாக வெளியான தகவல் தவறு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்

    கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்

    தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்ததாக வெளியான தகவல் தவறானது

    மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது.

    - கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

    18:30 (IST)04 Aug 2020

    மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்

    தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்

    திமுகவில் உள்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும்

    - திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

    18:24 (IST)04 Aug 2020

    பாஜகவில் இணையவில்லை

    பாஜகவில் இணையவில்லை என திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் விளக்கம்

    டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தது குறித்து பேட்டி

    "எனது தொகுதி பிரச்சனைக்காக நட்டாவை சந்தித்து பேசினேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

    17:01 (IST)04 Aug 2020

    சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய அபராத தொகை பட்டிலில் கொசு உற்பத்திக்கு காரணமான இடங்களின் உரிமையாளர்களுக்கு முதல் மூன்று முறை குறைந்தபட்சம் 100, மற்றும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    16:14 (IST)04 Aug 2020

    தருமபுரி மாவட்ட காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை; 6 பேர் கைது

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    16:11 (IST)04 Aug 2020

    ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

    ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நடப்பு ஆண்டே 50 சதவீத ஒபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசு கோரியுள்ளது.

    16:09 (IST)04 Aug 2020

    சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்

    சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக, ஒப்பந்த பணியாளர்கள் வெண்ணிலா, ராஜேஸ்வரி ஆகிய பெண் ஊழியர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    15:21 (IST)04 Aug 2020

    வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது

    வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

    14:58 (IST)04 Aug 2020

    இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் - வேலூர் மாவட்ட ஆட்சியர்

    வேலூரில் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.

    13:56 (IST)04 Aug 2020

    அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    13:30 (IST)04 Aug 2020

    நெல்லையில் குப்பை பிரிக்கும் இயந்திரத்தில் கை சிதைந்த தூய்மை பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்

    நெல்லையில் குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    13:28 (IST)04 Aug 2020

    ஆகஸ்ட் 10 காய்கறி, பழக்கடைகள் முழு அடைப்பு; கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி போராட்டம்

    கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

    13:09 (IST)04 Aug 2020

    இலங்கை தாதா உயிரிழப்பு விவகாரம் - 2 வழக்குகள் பதிவு

    இலங்கை தாதா அங்காடா லக்கா உயிரிழந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விசாரணை நடத்த 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர் அங்காடா லக்கா தானா என்பது குறித்தும் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

    12:55 (IST)04 Aug 2020

    அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    தமிழக அரசு அமைக்கும் குழுவின் கருத்தை அறிந்த பிறகே புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    12:47 (IST)04 Aug 2020

    தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டையை பெற்றோரை வரவழைத்து வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    12:33 (IST)04 Aug 2020

    பா.ஜ,.,வில் இணைகிறார் திமுக எம்எல்ஏ

    சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம், இன்று மாலை 4.30 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    12:00 (IST)04 Aug 2020

    வெள்ளக்காடானது மும்பை

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 மணிநேரத்தில் 230 மிமீ மழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மும்பையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    11:53 (IST)04 Aug 2020

    upsc தேர்வு முடிவுகள் வெளியீடு

    2019 செப்டம்பரில் நடந்த யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. upsc அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    11:34 (IST)04 Aug 2020

    புதிய உச்சத்தில் தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை ஆகின்றது.

    11:13 (IST)04 Aug 2020

    சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்

    கொரோனாவின் 2வது அலையை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

    10:45 (IST)04 Aug 2020

    19 பேர் பலி

    சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    10:16 (IST)04 Aug 2020

    பா.ஜ. தலைவர் எல். முருகன் அறிக்கை

    மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். கூடுதலாக ஒருமொழியை கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    10:04 (IST)04 Aug 2020

    முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1032 கன அடியில் இருந்து 4784 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    09:35 (IST)04 Aug 2020

    சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    09:32 (IST)04 Aug 2020

    18.55 லட்சமாக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18,55,745 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,938 ஆக உயர்ந்துள்ளது. 12,30,509 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:12 (IST)04 Aug 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஆக., 04), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 37வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 10வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    09:06 (IST)04 Aug 2020

    கொரோனா பாதிப்பு 19 சதவீதம் கண்டுபிடிப்பு

    சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்கள் மூலம் மட்டும் 19 சதவீத கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை  27 ஆயிரத்து 139 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் அறிகுறி இருந்தவர்களை சோதனைக்கு உட்படுத்தியதில் 16 ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Tamil nadu news today updates : கொரோனா தாண்டவத்தில் இருந்து மீள்கிறது மதுரை. பாதிப்பு 3 சதவீதமாக சரிவடந்துள்ளதால், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மதுரைக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் கடைசி வாரம் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Tamil Nadu Corona Virus Narendra Modi Ayodhya Temple Ram Temple
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment