தமிழகத்தில் அதி தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

author-image
abhisudha
New Update
TN Rains Alert

Tamil Nadu Rains| Northeast Monsoon| Red Alert Tamil Nadu| Orange Alert| Chennai Weather Forecast

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த சில நாட்களுக்குப் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது வரும் 36 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் நாட்களில் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (அக்டோபர் 21) வானிலை நிலவரம்:

ரெட் அலர்ட் (அதி கனமழை): ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை): சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20.4 செ.மீ. வரை மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மஞ்சள் அலர்ட் (கனமழை): தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான எச்சரிக்கை (அக். 22 & 23)

நாளை (அக்டோபர் 22):

ரெட் அலர்ட் (அதி கனமழை): செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (அக்டோபர் 23):

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை): சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் (கனமழை): வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: