Advertisment

மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக ஜூலை 2-ல் அமைதிப் பேரணி : தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு

இந்தியாவில் வடகிழக்கில் அமைத்துள்ள மிகச்சிறிய மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக வன்முறை தாண்டவம் ஆடுகிறது.

author-image
WebDesk
New Update
tamilnadu

தமிழக ஆயர் பேரவை

திருச்சி மேலபுதூர் பகுதில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையம் கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Advertisment

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கூறுகையில்,

இந்தியாவில் வடகிழக்கில் அமைத்துள்ள மிகச்சிறிய மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக வன்முறை தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் குடியிருப்புக்கள். உடமைகள் எரிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 300 தேவலயங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன. புனிதப் பொருட்கள் குறையாடப்பட்டுள்ளன. உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30,000 மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த மே மாதம் பழங்குடி மாணவரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை 50 நாட்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. மேலும் மணிப்பூரில் 53% ‘மெய்தி’ (Meit) இனத்தவரும், 41%, ‘குதி’ (Kuka) மீசோ'(Mizo) மற்றும் “நாகா’ (Nagi) போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர். பெரும்பாலும் ‘மெய்தி’ இனத்தவர்கள் சமவெளிகளிலும், பழங்குடியினர் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். இதன் அடிப்படையில் மெய்தி’ இனத்தவர் சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற்றுளளனர். பழங்குடிகளோ சற்றுப் பின்தங்கியவர்கள். ஆனால், தங்களையும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென ”மெய்தி்’கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மெய்தி சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளிக்க வேண்டுமெனக் கடந்த 19.04.2023 அன்று, மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இம்முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடியினர் அஞ்சினர். அதற்காகப் பழங்குடிகள் ஊர்வலம் நடத்திய போதே கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டனர். குறிப்பாகத் தலைநகர் இம்பால் மற்றும் ‘மெய்தி’ மக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலிருந்து ‘ருகி’ இனத்தவர் வேட்டையாடப்பட்டுள்ளனர்.

மேலும், ‘குகி’ இனத்தவர் செறிவாக வாழும் கிராமங்களிலிருந்தும் ‘மெய்தி’ இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் குறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, தங்கள் வீடு வாசலைத் தறந்து முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி, மக்கள் அலைமோதுகின்றனர். மிசோராம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளணர். குறிப்பாகக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாட வாழ்க்கைக்கான உணவு, மருத்துப் பொருட்கள் உட்பட அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் பகுதியில் இரு மாதங்களாய் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மத்திய, மாநில அரசு உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு அமைதி சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது. குறிப்பாக இனி வரும் காலங்களில் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுக்க கோரி நாளைய மறுதினம் ஜூலை 2 ஆம் தேதி  ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி (Silent Pricessioni) மெழுகுதிரிப் பேரணி (Candic Processiபோன்ற சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்த்திடவும், பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம். அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும். அதே நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழியும் எடுக்கப்படும்.

மேலும், மணிப்பூர் மக்களுக்கும், குறிப்பாகக் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் உடனடித் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளைச் செய்ய முயல்வோம் என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, நிர்வாகிகள் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, மறை மாவட்ட ஆயர்கள் அந்தோணிசாமி (பாளையங்கோட்டை), ஆரோக்கியராஜ் (திருச்சி), தமிழக துறவியர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி ரவி, அடைக்கல அன்னை சபை தலைவர் மரியபியோ, மான்போர்ட் சகோதர்கள் சபை மாநில தலைவர் இருதயம், திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment