நிரம்பி வழியும் நீர்நிலைகள்! தமிழக அணைகளில் 87% நீர் இருப்பு; 1,522 ஏரிகள் 100% நிரம்பின - குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு!

நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த 90 அணைகளிலும் சேர்த்து 196.897 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 87.77 சதவீதம் ஆகும்.

நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த 90 அணைகளிலும் சேர்த்து 196.897 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 87.77 சதவீதம் ஆகும்.

author-image
abhisudha
New Update
Chennai puzhal lake

Tamil Nadu Water Level |Mettur Dam Water Storage |Chennai Water Reservoirs| Poondi Reservoir

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் விளைவாக, மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்த் தேக்கங்களுக்கும் அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

Advertisment

அணைகளில் உயர்ந்த நீர் இருப்பு:

நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த அணைகளில் 196.897 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 87.77 சதவீதம் ஆகும். இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய அணைகளான மேட்டூரில் 93.47 டி.எம்.சி., பவானிசாகரில் 30.31 டி.எம்.சி., பரம்பிக்குளத்தில் 13.34 டி.எம்.சி., வைகையில் 5.60 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

1,522 ஏரிகள் முழுமையாக நிரம்பின:

தமிழகத்தில் மொத்தம் 14,141 பாசன ஏரிகள் உள்ளன. இதில், 1,522 ஏரிகள் 100 சதவீதம் (முழுமையாக) நிரம்பி உள்ளன. மேலும், 1,842 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 2,253 ஏரிகள் 51 முதல் 75 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. அதேசமயம், 620 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.

Advertisment
Advertisements

மாவட்ட வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,040 ஏரிகளில் 390 ஏரிகள் முழுமையாக நிரம்பி முதலிடத்தில் உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 192 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 164 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

சென்னை குடிநீர் நிலவரம்:

சென்னை மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 6 நீர்நிலைகளிலும் சேர்த்து தற்போது 10 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 75.53 சதவீதம் ஆகும்.

வெள்ள அபாயம் இல்லை:

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற ஏரிகளில் இருந்து உபரி நீர் தேவைக்கேற்பத் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகமாக இருந்தாலும், வெள்ள நீர் திறப்பின் அளவு முறையாக நிர்வகிக்கப்பட்டு, ஆறுகள் வழியாகப் பாதுகாப்பாகக் கடலைச் சென்றடையப் போதுமான இடைவெளி பராமரிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: