tamil news today : விவசாயிகள் உடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் சென்னை IIT யில் உள்ள மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்க்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த மாணவர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் விடுதியில் அறையில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருவதாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமனம்.
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
விவசாயிகள் உடன் இயல்பான பேச்சுவார்த்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எம். ஜி. வைத்தியா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், 'பல தசாப்தங்களாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எம். ஜி. வைத்தியா சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பி.ஜே.பியை வலுப்படுத்தவும் அவர் கடுமையாக உழைத்தார். அவரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன்' என்று தெரிவித்தார்.
திருணாமுல் கட்சியிலிருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர், இந்த வெளியேற்றம் ஒரு 'ஆரம்பம்' தான்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பணியாற்ற, காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் கட்சிகளில் உள்ளவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என மேற்கு வங்க மாநில பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
வேளாண் துறை அமைச்சர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார்.
கோவிட்-19-க்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 22-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார். 30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் கூறினார்
தமிழகம் முழுவதும் புதிய அரசுப்பள்ளிகளை தொடங்குவதற்கு தகுதியான இடங்களை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்நிலை பள்ளிகளாக மாற்ற தகுதியான தொடக்க பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டடுள்ளார்.
2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தற்போதே திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. இதனையடுத்து அதிமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்குகிறார்.
இதற்காக அவர் வழக்கம்போல், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில்வழிபாடுகளை நடத்தி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிடவுள்ளார்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24வது நாளாக விவசாயிகள் போராட்டம் .அமெரிக்காவில் Moderna தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தகவல் .ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் - 8ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.சேலம் எடப்பாடி தொகுதியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
2021 சட்டமன்ற தேர்தலுக்கான சின்னமாக பேட்டரி டார்ச்-ஐ, பயன்படுத்தும் உரிமை, ம.நீ.ம. கோரியுள்ளதாக மனுவில் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights