திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சென்னையில் இருந்து (28.06.2023) அதிகாலை இண்டிகோ விமானத்தில் புறப்பட்டார்.
இந்த விமானம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானம் ஆகும். விமானம் புறப்படும் போது விமானி, தனது அறிவிப்பை தமிழில் மிக அழகாக சிரிப்போடு பயணிகளுக்கு அழகாக எடுத்துக் கூறினார்.
அதைப் பார்த்த ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவரை அழைத்து அவர் பெயர் கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார். மேலும் ஒரு கோடு போட்ட நோட்டு பேப்பரில் தனது வாழ்த்து மடலை எழுதி விமானி சங்கர் நடராஜனுக்கு வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“