நடிகர் கமல்ஹாசன் கருத்துகளை நாங்கள் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நற்பணி மன்த்தினர் நிலவேம்பு கசாயம் வினியாகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களை நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது: நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படாது என அறிவிய்ல் பூர்வமக நிரூபிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனை பொறுத்தவரையில் அவர் அனைத்தையும் சினிமா என்றே பார்ப்பதாக தெரிகிறது. எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசுவது என்பது அரசியல் ஆகாது என்பதை கமல்ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கமல்ஹாசனின் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.