Advertisment

கொள்ளிடம், காவிரியில் 50 இடங்களில் ஆற்றில் இறங்கத் தடை : திருச்சி எஸ்.பி சுஜித்குமார்

இரவு நேரங்களில் மாவட்ட காவல்துறையினர், வருவாய்த்துறை இணைந்து கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

author-image
WebDesk
New Update
கொள்ளிடம், காவிரியில்  50 இடங்களில் ஆற்றில் இறங்கத் தடை : திருச்சி எஸ்.பி சுஜித்குமார்

க.சண்முகவடிவேல்

Advertisment

கனமழை காரணமாக காவிரி திருச்சி மாவட்டத்தில் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட பேரிடர் மீட்பு படையினருடன் அவசரகால மீட்பு பணிகள் மற்றும் முன்னோட்டம் செய்தனர்.

publive-image

அவசர காலங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான இந்த முன்னோட்ட நிகழ்வுகளையும் நேரடியாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ரப்பர் படகில் அமர்ந்து கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கை பார்வையிட்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இரண்டு குழுவில் 64 பேர் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். திருச்சியில் 50க்கும் மேற்பட்ட இடங்கள் காவிரி கொள்ளிடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

publive-image

அப்பகுதியில் இரவு நேரங்களில் மாவட்ட காவல்துறையினர், வருவாய்த்துறை இணைந்து கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவசர காலத்தில் பேரிடர் மையத்தை தொடர்பு கொண்டால் வருவாய்த்துறை, காவல் துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment