Advertisment

ஆளுனருக்கு எதிராக ஸ்டாலின் கடிதம்; இதற்கு முன் உதாரணம் மோடி-தான்: முரசொலி அட்டாக்

ஆளுனர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin Ravi

முதல்வர் ஸ்டாலின் - ஆளனர் ரவி

ஆளுனர் மாநில அரசையும், கூட்டாட்சி அமைப்பையும் வலுவிழக்க செய்யும் செயலில் ஈடுபடுவதாகவும் அவரை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இப்போது முதல்வர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியதற்கு முன்னுதாரணம் அவர் தான் என்று முரசொலி தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுனருக்கும் திமுக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுனர் அரசை விமர்சிப்பதும், அதற்கு அரசு பதிலடி கொடுப்படும், மக்களுக்கான திட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் இழுத்தடிப்பது என தொடர்ந்து பரபரப்பான தருணங்கள் அரங்கேறி வருவதால், தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே ஆளுனர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியதற்கு முன்னுதாரணமே பிரதமர் மோடி தான் என்று முரசொலி பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளது கடிதம் அல்ல. குற்றப்பத்திரிக்கை! இப்படி எழுதலாமா, முன்னுதாரணம் இருக்கிறதா என்றெல்லாம் சிலர் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

“ராஜ்பவனில் போட்டி அரசு நடத்தும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் கருவியாக ராஜ்பவனை மாற்றியுள்ளார். ஆளுநர் பதவிக்கான கண்ணியத்தை அவர் இழந்துவிட்டார்.  மாநில அரசையும் கூட்டாட்சி அமைப்பையும் வலுவிழக்கச் செய்யும் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்" என்று சொன்னவர் 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தான். எனவே முன்னுதாரணம் இருக்கிறது. மோடிதான் அந்த முன்னுதாரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிக்கை மிகமிகத் தெளிவானது. வெளிப்படையானது. சட்டபூர்வமானது.

ஆளுநர் ரவி மீதான புகார்கள்

ஆளுநர் என்பவர். முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதி நிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவராக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை.

இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச. மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதி அற்றவர்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர். அப்பதவியில் தொடரவே கூடாது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை. செயல் பாடுகள். முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் அவர் செயல்படுகிறார்.

சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுகிறார். 6.2021 செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற் றக் கழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி இல்லை

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுத்து வருகிறார்.

ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க.. அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

பி.வி.ரமணா @.பி.வெங்கட்ரமணா - முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் - கோப்பு எண் AC/495/2022. நாள் 12.9.2022 என்றகோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

சி. விஜயபாஸ்கர் - முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் - கோப்பு எண் AC/495/2022. நாள் 12.9.2022 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

கே.சி. வீரமணி - முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் - கோப்பு எண் AC/454/2021. நாள் 12.9.2022 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார்.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர் -முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் -கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023 என்ற கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். 13. ஆளுநர் தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக்கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்து வதோடு மட்டுமல்லாமல். சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட- முயல்கிறார்.

ஆளுநரின் பிளவுபடுத்தும் பேச்சு

இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று அவர் சொல்வது இந்திய அரசியல மைப்பை அவமதிக்கும் செயலாகும்.

திருக்குறளை வகுப்புவாதப்படுத்துகிறார்.

தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும். திராவிடக் கருத்தியலையும். அரசியலையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்.

திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று அவர் சொல்வது அவதூறு மட்டுமல்ல, அவரது அறியாமை ஆகும்.

கூட்டாட்சித் தத்துவம் என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியவில்லை.

இலக்கியம் மக்களுக்கு மிக மோசமாக போதிக்கப்பட்டுள்ளது. என்று சொல்வதன் மூலமாக தமிழ் இலக்கியங்களை அவமானப்படுத்துகிறார்.

தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் “தமிழ்நாடு” என்ற பெயரை சிதைக்க நினைக்கிறார். 23.இவர் தமிழர் நலனுக்கு எதிரானவர்.

தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவராக இருக்கிறார்.

அவரது சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என முரசொலி தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment