Advertisment

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu fishermen arrested

tamilnadu fishermen arrested

கச்சத்தீவு -நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேர் ஒரே படகில் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே உள்ள கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்து காங்கேசன் துறைமுகம் முகாமிற்கு அழைத்துச்சென்றனர்.மேலும் மீனவர்களிடம் இருந்து அவர்கள் பயணித்த படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Srilankan Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment