கனமழை எதிரொலி; சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுமா என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுமா என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
D. Elayaraja
New Update
school leave

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள், வேகமாக நிரம்பி வரும் நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டுர்ர் அணை, பாவனி சாகர் அணையில், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை மேலும் தொடரும் என்பதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும், தீபாவளி விடுமுறை இன்றுடன் (அக்டோபர் 2) முடிந்த நிலையில், நாளை மழை காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுமா என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

இதனிடையே கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர். 22) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, கடலூரிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Taminadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: