/indian-express-tamil/media/media_files/2025/10/27/karur-incid-2025-10-27-08-02-56.jpg)
கரூரில் நடந்த த.வெ.க பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திக்க உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், அவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று சந்திக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மாலையில் கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர், பொதுச்செயலாளர் மற்றும் இணை பொதுச்செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடியோ காலிங்கில் தொடர்புகொண்டு பேசிய நிலையில், விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும், அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே தற்போது விஜய் கரூர் செல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து அவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ள த.வெ.கவினர் அவர்களை மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்க வைத்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 27) விஜய் அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களில் 33 குடும்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
5 சொகுசு பேருந்துகளில் சுமார் 10 மணி நேர பயணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்காக தனியார் விடுதியில் 55 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தினரை தனித்தனியாக விஜய் சந்திக்க உள்ளதாகவும், இன்று காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 33 குடும்பங்கள் தான் தற்போது வந்துள்ள நிலையில், மீதமுள்ள 5 குடும்பத்தனர் விமானம் மூலம் இன்று சென்னைக்கு வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிய த.வெ.க தலைவர் விஜய் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம் இன்றைய சந்திப்பின்போது வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்புக்கு ஊடகங்கள் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us