சம்பளம் வாங்கும் மேனேஜர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்படுவதாக கூறியுள்ள, அக்கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கமல்ஹாசன், கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டார். இவரது கட்சி வேட்பாளர்கள் குறிப்பிடத்க்க வாக்குகள் பெறவில்லை என்றாலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார்.
இதனிடையே 4 வருட இடைவெளிக்கு பின் கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் கமல்ஹாசன், இடையில் அடுத்து சந்திக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியில் சம்பளம் வாங்கும் மேனேஜர்களால் கட்சி பாதிக்கப்படுவதாக கூறி அக்கட்சியின் நிர்வாகி கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ரம்யா வேணுகோபால், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், கட்சியின் நிலை குறித்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பதிவில்,
Dear MNM Family,
Our paths now diverge and it is with a heavy heart that I announce the conclusion of my journey with MNM. Throughout my time here, I have fought passionately for the values I hold and share with our beloved Kamal sir. However, it has become evident that this…— Ramya Venugopal (@RamyaVenugopalM) July 27, 2023
“ஊழல் நபர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் தலைவர்கள் போல் செயல்படவில்லை. அதனால் கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் என்னை தன்னார்வலராக இருந்து மண்டல ஊடகத்துறை தலைவராக உயர்த்தியதற்காக கமல்ஹாசன் சார் அவர்களுக்கு நன்றி. ஆனால் சூழ்நிலைகள் அவரை கட்சி விவகாரங்களை நிர்வகிக்க நேர்மையற்ற நபர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளியுள்ளது அதனால் கமல்ஹாசனுக்கு முன்பை விட உண்மையான ஆதரவாளர்கள் தேவை என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.