மோன்தா புயல் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் எங்கு, எவ்வளவு மழை பொழிவு?

சென்னையில், அதிகபட்சமாக எண்ணுரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கத்திவாக்கத்தில், 9.54 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலியில் 7.32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையில், அதிகபட்சமாக எண்ணுரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கத்திவாக்கத்தில், 9.54 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலியில் 7.32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

author-image
D. Elayaraja
New Update
rain

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ள நிலையில், வட தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், கடந்த 24-ந்தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக மாறிய நிலையில், தற்போது புயலாக வலு பெற்றுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நேற்று மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று மோன்தா புயல் தீவிர சூறாவளி புயலாக மாறி வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டது.

மோன்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில், அதிகபட்சமாக எண்ணுரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கத்திவாக்கத்தில், 9.54 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலியில் 7.32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

Advertisment
Advertisements

மேலும் மேடவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ, பேசின் ப்ரிட்ஜ், தண்டையார் பேட்டை, அமைந்தகரை, அடையாறு, பாரிமுனை, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில், 6.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது, அதேபோல், பொன்னேரி, ஆவடியில் தலா 7 செ.மீ, ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ., தாமரைப்பாக்கத்தில் 4 செ.மீ, கும்மிடிப்பூண்டி, பூண்டியில் தலா 3 செ.மீ, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஜமீன் கொரட்டூரில் தலா 3 செ.மீ மழை பதிவு திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 265-லிருந்து 556 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், சென்னை குடிநீர் தேவைக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: