Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 26ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறைக்கு புலன்விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை முதன்மை நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வீடு மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் முடிவில், ஊழல் மற்றும் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையினால் கடந்த ஜூன் 14-ந் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி,  நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே தனது கணவர் செந்தில்பாலாஜியை அமலாகத்துறை சட்டவிரோமாக கைது செய்ததாக கூறி அவரின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை என்றும், அவர் தனியார் மருத்துவனையில் 10 நாட்கள் சிகிச்சை பெறலாம். அதன்பிறகு சிறை மருத்துவமனைகயில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதி சிவி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தரப்பில், வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, கபில் சிபில் ஆகியோர் ஆஜாகியுள்ளனர். இவர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதத்தை முன் வைத்தார்.

Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-வரை காவல் நீடிப்பு

இதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் கைது செய்யப்படுவதற்கான காரணங்களை முன்வைத்து வாதங்களை முன்வைக்கையில், “23 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டு இருந்தது. மேலும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்படி புலன்விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமையாகும்.

காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் அனுமதிக்காவிட்டாலும் புலன்விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமையாகும். குற்றத்தைக் கண்டுபிடிக்க சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்க, சோதனை செய்ய, சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் புகார் வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. 

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறைக்கு புலன்விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும். ஆதாரங்கள் சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன்விசாரணை நடவடிக்கைதான். சட்டவிரோதப்   பணப்பரிமாற்றத் தடைச்சட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். கடந்த 18 ஆண்டுகளில் அமலாக்கத்துறையினரால் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் அமலாக்கத்துறை விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூற முடியாது.  

அமலாக்கத்துறை தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பு. எனவே அமலாக்கத்துறைக்கு புலன்விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது. அதே வேளையில் தவறான விசாரணை என்றால் விசாரணை அதிகாரிக்குத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது” என அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை என்று கூறியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சிவி கார்த்திகேயன் விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதனிடையே இன்று தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், செந்தில்பாலாஜியின் காவல் இன்றுடன் நிறைவடைவதால், அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் காவல் நீடிப்பு வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வரும் ஜூலை 26-ந் தேதி வரை காவல் நீடித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment