டெல்டாவில் இருந்து சென்னையை நோக்கி நகரும் மழை; மக்களே உஷார்..! தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

புதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும்.

புதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்யக்கூடும்.

author-image
D. Elayaraja
New Update
Tamilnadu rain Update

தமிழக கடலோரத்தை ஒட்டி இன்று (அக்டோபர் 21) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் (அக்டோபர் 21-23) வரை கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்னதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், புதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்திற்கு மிக அருகில் இருப்பதால், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடலோரத்திற்கு இணையாக நகர்வதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும். இது அரபிக்கடலில் உள்ள ஒரு காற்றழுத்த தாழ்வுடன் ஒரு துரோக் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டிற்கு மிக அதிக மழைப்பொழிவில் முடிவடையப் போகிறது. டெல்டா பகுதியை ஒட்டியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக மேல்நோக்கி நகரும்போது, தற்போது டெல்டா பகுதியில் உள்ள குவிதல் கடலூருக்கு மாறும், அதன்பிறகு சென்னை பகுதியை நோக்கி நகரும். இதனால் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும். இன்றைய தினத்தை சேர்த்து அடுத்த இரண்டு நாட்களுக்கு, பகல் நேரங்களிலும் பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்று சென்னையில் மழைப்பொழிவின் கால அளவு மற்றும் வீச்சு அதிகரிக்கும். இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நமது அட்சரேகையை தாண்டி மேலே செல்லும்போது, தமிழ்நாட்டில் மழை குறையும். அதே சமயம், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை. அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 25/26 ஆம் தேதிகளில் உருவாகும். மாதம் இறுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்தான் புயலாக மாற வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

வானிலை அமைப்பின்படி இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் தனியாகக் குறிப்பிடுவது கடினம். டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை), இராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் பல பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilnadu rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: