Advertisment

மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ 7000 கோடி; அரசாணை ரிலீஸ்: மாதம் ரூ1000 பெற தகுதிகள் என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mayors allowance has been sanctioned

சென்னை தலைமை செயலகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

Advertisment

21 வயது நிரம்பிய மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் வரி செலுத்துபவர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சொந்த பயனுக்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் உள்பட இத்திட்டத்தில் பயன் பெற முடியாது. இவ்வாறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. திட்டச் செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேப்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment