கரூர் விஜய் கூட்ட நெரிசல் வழக்குகள்: த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

த.வெ.க நிர்வாகிகள் முன்ஜாமின் கோரிய மனுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரிய மனுக்கள், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்றது,

த.வெ.க நிர்வாகிகள் முன்ஜாமின் கோரிய மனுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரிய மனுக்கள், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்றது,

author-image
D. Elayaraja
New Update
Karur Vijay

கரூர் சம்பவம் தொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், த.வெ.க நிர்வாகிகள் முன்ஜாமின் கோரிய மனுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட கோரிய மனுக்கள், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் குறித்து விசாரணை நடத்த உள்ளது. 

Advertisment

கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடந்த த.வெ.க பிரச்சார கூட்டணத்தில கூடட நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து 41 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் தமிழக அரசின் சார்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட த.வெ.க செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் மத்திய அரசின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று த.வெ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த மனுக்கள் மீதான விசாரணையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்க தனியாக குழு அமைத்தும் உத்தரவிட்டது. இதனிடையே கரூரில் தங்கள் பிள்ளைகள் உறவினர்களை பறிகொடுத்த 41 குடும்பத்தினரிடம், வீடியோ காலிங்கில் பேசிய விஜய், இன்று (அக்டோபர் 27) அவர்களை மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, இன்று இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது. இதில் கரூர் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரிய மனு,  விசாணைக்கு வர உள்ளது.

Advertisment
Advertisements

அதே போல், விஜய் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்குகள், கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேபோல், கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, த.வெ.க தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்னரே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், தாக்கல் செய்யப்பட்ட மனு, குறித்தும் விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்து அவர் மீதான வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், தனது மனுவை வாபஸ் பெறுவதாக அவரது தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை நீதிபதி அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: