/tamil-ie/media/media_files/uploads/2017/10/z664.jpg)
Rain In Tamil Nadu
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று(10.11.17) மதியம் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது: நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கழையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகத்தின் கடலோட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை 24 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த கால கட்டத்தில் இயல்பு அளவானது 26 செ.மீ ஆகும்.
சென்னையைப் பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும். சில சமயங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.