/indian-express-tamil/media/media_files/breER2xDtlMCZVrdXJfB.jpg)
டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, "தமிழ்நாடு வெதர்மேன்" என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வானிலை நிலவரங்கள் குறித்துத் தெரிவிக்கும் அவர், இன்று வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை, நீலகி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (நவ.06) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us