Advertisment

தமிழகத்தில் 10 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும்! வெள்ளம் வருமா? - தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை : அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த 10 நாட்களில் இந்த மழை இருக்கும். கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது.

இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப்பகுதியில் மழை தனது பணியை செய்ய இருக்கிறது.

அடுத்த சில நாட்களுக்கு, அதாவது நாள்தோறும் கூட தமிழகத்திலும், சென்னையிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

வடசென்னையில் இன்று இரவுகூட மழை இருக்கும். இன்று இரவு தென்சென்னை புறகர் பகுதிகளில் காஞ்சிபுரத்தில் இருந்து நகர்ந்து வரும் மேகக்கூட்டங்களால் மழைபெய்ய வாய்ப்புண்டு. ஒருவேளை இன்று இரவு மழை பெய்யாவிட்டாலும் கூட, அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

ஆனால், வெள்ளம் வருவதுபோல் மழை பெய்யாது. சென்னையில் இதுபோன்ற மழையால் வெள்ளமும் வராது.

கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிகக் கனமழை இருக்காது" என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment