/tamil-ie/media/media_files/uploads/2017/10/z527.jpg)
மதுபான விலையை உயர்த்த ஒப்புதல்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் பீருக்கு ரூ.10ம், குவார்ட்டருக்கு ரூ.12ம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை 20% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், விழிப்புணர்வு ஆகியவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
More Details Awaited....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.