Advertisment

டாஸ்மாக் கடைகளை மூட எதிர்ப்பு; கட்டிட உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் மனு

டாஸ்மாக் கடைகளை மூட எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

author-image
WebDesk
New Update
TASMAC

டாஸ்மாக்

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான தமிழக அரசின் முடிவை எதிர்த்து மொத்தம் 24 கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்தது. மொத்தம் 5,329 கடைகள் இயங்கி வந்த நிலையில் 500 கடைகளை மூட ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையும் படியுங்கள்: கோர்ட்டுக்கு வந்த ராக்கெட் ராஜா: ஆலங்குளத்தில் போட்டி என அறிவிப்பு

இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளை மூட எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலமுருகன், அமல்ராஜ் உள்ளிட்ட மனுதாரர்கள், தலா ரூ.30 லட்சம் முதலீடு செய்து, கட்டிட வளாகத்தை மதுக்கடைகளுடன் சேர்த்து விற்பனை நிலையங்கள் நடத்துவதற்கு ஏற்றதாக மாற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், கடைகளை மூடுவதற்கான அளவுகோல்களாக குறைந்த விற்பனை, மத மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், நீண்ட காலமாக பொதுமக்களால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட கடைகள், மூடுவது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் உள்ள கடைகள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்த கடைகள் உள்ளன என்றும் மனுதாரர்கள் கூறினார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ​​2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment