Advertisment

'டாஸ்மாக் கடைகளில் இனி ஸ்வைப்பிங் மிஷின்': கூடுதல் பணம் வசூலுக்கு ஆப்பு வைத்த நிர்வாகம்

மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப்பிங் மிஷின் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TASMAC

டாஸ்மாக்

தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குவோரிடம் இருந்து பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்த 10 ரூபாய் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வசூலிக்கப்படுவதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மிஷின் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4810 டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சி மதுபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment