மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு புகார் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத் துறை செயலாளர் அனுமதியளித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளது. அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த பொதுத் துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளார். அதன்படி அமைச்சருக்கு எதிராக ஆரம்பக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, வழக்கறிஞர் அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து விசாரணைக்கு அனுமதியளிக்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், முதலமைச்சர் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தலைமை செயலாளர் அல்லது துறை சார்ந்த செயலாளர்கள் அனுமதியளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு விசாரணையை தொடரலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tender fraud case against minister sp velumani chennai hc tamilnadu government
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை