தென்காசி மாவட்டம் சக்தி நகரை சேர்ந்த அய்யாத்துரை (60) என்பவரின் மகன் சூர்யா. அய்யாத்துரை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
சூர்யாவுக்கு கொடைக்கானலில் காட்டேஜ் ஒன்று கட்ட வேண்டும் என ஆசை நீண்ட நாள்களாக இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் அவ்வப்போது இடம் பார்க்க கொடைக்கானல் சென்றுள்ளார்.
அப்போது அவர் தங்கியிருந்த காட்டேஜ் அருகில் சென்னையை சேர்ந்த சுவேதா என்ற கேரலின் (25) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து இருவரும் கொடைக்கானல் கல்லுக்குழி மலோனிகுடில் என்ற பகுதியில் கடந்த 9 மாதங்களாக வீ’டு எடுத்து லிவ்விங் முறையில் ஒன்றாக தங்கியிருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் டிசம்பர் 1ஆம் தேதி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரலின், அவரது நண்பர்களை அழைத்துள்ளார்.
அப்போது சூர்யா மாடிபடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சூர்யா மரணித்துவிட்டார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன.
இதையடுத்து மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரலின் மற்றும் அவரது நண்பர்கள் நால்வரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர். அப்போது பெண் உள்பட அவரது நண்பர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் மது விருந்து அளித்து சூர்யாவை, தனது பாய் பெஸ்டிகளுடன் இணைந்து இளம் பெண் உருட்டு கட்டையால் அடித்து தீர்த்துகட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil