/tamil-ie/media/media_files/uploads/2017/06/a646.jpg)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதல் இரு கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவைக் கோரி வருகின்றன.
தமிழகத்தில் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, அதன் மூன்று பிரிவுகளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க. ஆதரவு எம்எல்ஏ-வான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளரான மீரா குமாரை ஆதரிப்பதாக இன்று தெரிவித்துள்ளார். தலித் மக்களின் நலனுக்காத்தான் இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பேரறிவாளன் பரோல் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதற்காக, அவரை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.