Advertisment

சட்டக்கல்லுரி மாணவர்கள் மோதல் வழக்கில் சமரசம் செய்யது கொள்ள முடிவு!

இந்த வழக்கை விசாரித்த சென்னை 17வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dr-Ambedkar-law-college

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில், இரு தரப்பும் சமரசம் செய்ய இருப்பதாக கூறியதை அடுத்து, தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Advertisment

chennai law college சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சி

கடந்த 2008 நவம்பர் 12ம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன், ஆறுமுகம் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 17வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பாரதிகண்ணன், சித்திரைச் செல்வன் உள்ளிட்ட 21 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 2016 ஜனவரியில் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் சமரசம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி தள்ளிவைத்தார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment