Advertisment

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம்; தேசிய பசுமை தீர்ப்பாயம்

"நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் விதித்தால் என்ன? அந்தக் கட்டணங்களை நீர் நிலைகளை பராமரிக்க பயன்படுத்த வேண்டும்" என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
chennai

சிலை கரைக்க அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனால் நீர் நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன.

மேலும் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகிறது; ஆகவே நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, " விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்; இதன்மூலம் வசூலாகும் பணத்தில் இருந்து அந்த நீர் நிலைகளை பராமரிக்க செலவிட வேண்டும்" என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உத்தரவு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

National Green Tribunal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment