/tamil-ie/media/media_files/uploads/2017/05/sec..jpg)
அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி கொண்டு வந்து வெற்றி பெற்றார்.
நான்கு மாத காலத்தில் எடப்பாடியை ஆதரித்த பலரும் அமைச்சர் பதவி, வாரிய தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தனித்தனிக் குழுக்களாக முதல்வரை சந்தித்து வருகின்றனர். எதிகட்சிகள் தரப்பில் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை பிரதமரை சந்திக்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பியதும் நாளை மறுநாள் அமைச்சரவையை கூட்டி விவாதிக்க உள்ளார், முதல்வர்.
அமைச்சரவை கூட்டத்தில் சட்டசபை கூட்ட தொடர் தொடர்பாக முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.