Advertisment

“மகளிர் வாக்குகளை பெற நாடகம்”: மக்களவையில் திருமாவளவன் குற்றச்சாட்டு

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நடைபெற இருக்கிற நாடாளுமன்ற பொதுதேர்தலில் மகளிர் வாக்குகளை கவர்வதற்கான ஆளுங்கட்சியின் ஓர் நாடகமாகத்தான் இதை பார்க்கிறேன் என எம்.பி. திருமாவளவன் கூறினார்.

author-image
Jayakrishnan R
New Update
திருமாவளவன்

தொல். திருமாவளவன் எம்.பி.

Womens Reservation Bill: புதிய நாடாளுமன்றத்தில் முதல் உரையாக மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசினார்.

இன்று புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடர் தொடங்கின. இந்தக் கூட்டத் தொடரில் தொல். திருமாவளவன் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

Advertisment

அப்போது, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை வரவேற்று பேசிய அவர், “இந்த மசோதா நடைமுறைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. உடனே நடைமுறைப்படுத்த எந்த முனைப்பும் இல்லாமல் ஏன் இதனை அறிமுகப்படுத்த வேண்டும்?

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற பொதுதேர்தலில் மகளிர் வாக்குகளை கவர்வதற்கான ஆளுங்கட்சியின் ஓர் நாடகமாகத்தான் இதை பார்க்கிறேன்" என்றார்.

தொடர்ந்து, “தொல். திருமாவளவன் பேசியபோது திடீரென மைக் கட்டானது. ஆனாலும் தொல். திருமாவளவன் தொடர்ந்து பேசினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிராக 2 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment