Advertisment

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் : திருமாவளவன்

ஆட்சியை காப்பதற்காகவே டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் கருத்து

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK, It Raid in Chennai, Jaya TV Office, IT Raid in Kodanadu Estate, Thanjavur, Viduthalai Chiruthaigal Katchi, Thol. Thirumavalavan, BJP,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை காப்பதற்காகவே டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன் எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும் போது : நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால், அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது, தகுதி நீக்க நடவடிக்கை மூலம் தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை பாதுகாப்பதற்காகவே, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் வரை தற்போதைய ஆட்சியை பாஜக பாதுகாக்கும். தமிழக அரசியல் சூழநிலைக்கு தற்போது நிரந்தரமான ஆளுநரை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Dmk Thirumavalavan Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment