/tamil-ie/media/media_files/uploads/2017/05/A354.jpg)
தென் மாவட்ட திமுகவின் முக்கிய அரசியல்வாதியாகவும், திமுக தலைவர் கருணாநிதியால் 'முரட்டு பக்தன்' எனவும் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்.
இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர். 78 வயதான பெரியசாமி, கடந்த சில மாதங்களாகவே, புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருந்தார். உடல் நலக்குறைவால் சென்னை நியூ ஹோப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவரிடம் உடல் நலம் விசாரித்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய இளைய மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் தூத்துக்குடி வர தாமதமாகும் என்பதால், உடல் எம்பாமிங்க் செய்ய ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று இறுதி சடங்கு நடக்கலாம் என தெரிகிறது.
1989, 1996 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். என்.பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தற்போது தூத்துக்குடி எம்.எல்.ஏவாக உள்ளார். மறைந்த என் .பெரியசாமிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.